
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பாலைக் கொடுக்கும் பசுவை தாயாகக் கருதி 'கோமாதா' என்று வழிபாடு செய்கிறோம். பசுவைத் தரிசிப்பது சுபசகுனம்.
* பசு புனிதமானது. கோதூளி என்னும் பசுவின் திருவடி பட்ட தூசு நம் மீது பட்டால் பாவம் அனைத்தும் ஓடி விடும்.
* தீட்டு உள்ளவர்கள், கோதூளியை (பசுவின் குளம்பிலிருந்து கிளம்பும் தூசு) உடம்பில் பூசிக் கொண்டால் புனித நீராடிய பலன் உண்டாகும்.
* எல்லா தேவதைகளும் பசுவின் உடம்பில் குடியிருப்பதால் பசுவை வணங்கினால் அவர்களின் அருள் கிடைக்கும்.
- ஜெயேந்திரர்